
கார்த்திகை தீபம்
குன்றின் மேலிட்ட விளக்கு போல்…..
28/11/2020 பரணி தீபம்
- மாலை 6 மணிக்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்ச தீபம் ( 5 தீபங்கள் நெய்யிட்டு, பஞ்சுத் திரியிட்டு) வாழை இலையை வட்டமாக நறுக்கி, தீபங்கள் உள்புறமாக ஒன்றோடு ஒன்று சேரும்படி வட்டமாக விளக்கேற்ற வேண்டும்.
ஒவ்வொரு விலக்கையம் கழுவி, மஞ்சள் குங்குமம் இட்டு, ஒவ்வொரு தீபத்தின் இடைவெளியில் மலர்கொண்டு அலங்கரிக்க வேண்டும். - அகல் விளக்கு பயன்படுத்தலாம்.
- வீட்டின் வாசலில் இருபுறமும் வாழை மரம் கட்டி அதில் நுனியை கிள்ளி விட்டு தீப்பந்தம் வைக்கலாம்.
- வாசலில் கோலமிட்டு சில விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.
- இன்றும் கோயில்களில் வாழை மரம் வைத்து தென்னங்கீற்று சுற்றி தீப்பந்தம் கொளுத்துவார்கள். ( சொக்கப்பனை)
29/11/2020 பெரிய கார்த்திகை/ திருக்கார்த்திகை
திருவண்ணாமலை தீபம்.
- மண்டல தீபம் (48 எண்ணிக்கை ஒரு மண்டலம்)
48 விளக்குகள் மூன்று வட்டங்களாக ஏற்றலாம். - உள்வட்டம் 9 விளக்கு(நவ கிரகங்கள்) நடுவட்டம் 12 விளக்கு (12 இராசிகள்) வெளிவட்டார 27 விளக்குகள்( 28 நட்சத்திரங்கள்) குறிக்கும்படி ஏற்றலாம்.
- ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கு ஏற்றலாம்.
(3,5,7,9…) - குறைந்த பட்சம் 27 விளக்குகள் வீட்டின் அனைத்து அறைகள், வாசல் மொட்டைமாடி போன்ற இடங்களில் ஏற்றுவது சிறப்பு. அம்மி மிதத்தல் அருந்ததி பார்ப்பது போல், அன்று அம்மிக்கலில் தீபம் ஏற்றலாம்.
- தீபத்தின் ஒளி இருளைப் போக்கும். அதுபோல் நம் மன இருளை போக்க இறைவனை வேண்டி அண்ணாமலையாருக்கு அரோகரா என்று வாழ்த்துக் கூறி, சிவபுராணம் மற்றும் திருவாசகம் படிக்கலாம். இறைவனை ஜோதிப் பிழம்பாக வழிபட வேண்டும்.
30/11/2020 பஞ்ச தீபம்
- பஞ்ச தீபம் ஏற்றி வழிபடலாம்.
- சைவம் Vs வைணவம் – இரண்டு பிரிவினரும் இந்த கார்த்திகை மாதம் தீபத் திருநாள் கொண்டாடுகின்றனர்.
- அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தவர் பூதத்தாழ்வார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகிஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்குஞானத் தமிழ் புரிந்த நான்
- பூதத்தாழ்வாரின் திருவந்தாதி நினைத்தும் வழிபடலாம்.
- சிவனடியார்கள், வைணவ ஆழ்வார் பாடல்களில் ஆர்வம் காட்டுவதில்லை.
தீபத்தின் வகைகள்/ விளக்கு வகைகள்
- அன்ன விளக்கு( அன்னப்பறவை)
- கஜலட்சுமி விளக்கு
- அஷ்ட லட்சுமி விளக்கு
- குபேர விளக்கு
- திரிசூல விளக்கு
- கஜ முக விளக்கு( யானை/ விநாயகர்)
- பாவை விளக்கு
- கிளி விளக்கு
- லக்ஷ்மி விளக்கு
- மயில் விளக்கு
- தாமரை விளக்கு
- சங்குச் சக்கர விளக்கு
- குத்து விளக்கு
- அகல் விளக்கு
- அஷ்டோத்திர விளக்கு.
- நாச்சியார் கோவில் விளக்கு
இதில் சில விளக்குகளை கோயில்களில் மட்டுமே ஏற்ற வேண்டும்.
தீபத்தின் முகங்கள்
- ஒருமுகம்- சுமார்
- இருமுகம்- கணவன் மனைவி ஒற்றுமை
- மூன்று முகம்- பிள்ளைகள் வழி நலம்
- நான்கு முகம்- செல்வம்
- ஐந்து முகம்/பஞ்ச முகம்- வளம்
தீபத் திரி வகைகள் மற்றும் பயன்கள்
- வெள்ளெருக்கு- விநாயகர் அருள் கிடைக்கும். கடன் தீரும்.
- பச்சை திரி- குபேர அருள் கிடைக்கும்
- தாமரைத் தண்டு- செல்வம்
- பஞ்சு – மங்களம்
- வாழைத் தண்டு திரி – மன அமைதி, புத்திர பாக்கியம்
தீப எண்ணெய் மற்றும் பயன்கள் / சிறப்புகள்
- நெய் – மஹாலக்ஷ்மி அருள், மோட்சம் கிடைக்கும்.
- விளக்கெண்ணெய்- குடும்ப நலன்
- நல்லெண்ணெய் ( எள்)- கடன், நோய் தீரும்
- இலுப்பை எண்ணெய் – குல தெய்வம் அருள்
- தேங்காய் எண்ணெய்- விநாயகருக்கு மட்டும்.
தீபம் ஏற்றும் திசைகள்
( தெற்கு திசை தவிர மற்ற திசைகளில் ஏற்றலாம்)
- கிழக்கு – மங்களம்
- மேற்கு- கடன் நோய் தீரும்
- வடக்கு- செல்வம்
கார்த்திகைப் பெண்கள்
- கார்த்திகை நட்சத்திர தொகுதி பல நட்சத்திரங்களைக் கொண்டிருந்தாலும், அதிர் ஆறு நட்சத்திரங்கள் கார்த்திகேயனை ( முருகனை) வளர்த்த கார்த்திகைப் பெண்களாக வணங்கப்படுகின்றன.
- நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா என்பவனவாகும்.
- முருகனை வளர்த்த கார்த்திகை பெண்கள் தவம் மேற்கொள்ளாமல் சிவனிடமிருந்து அஷ்டமா சித்திகள் பெற வேண்டி, பின்னர் அவர்களின் அலட்சியத்தால் ஆயிரம் ஆண்டுகள் வரை கற்பாறைகளாக சபிக்கப்பபட்டு சிவனால் சாப விமோசனம் பெற்றனர் ( கதை)
கார்த்திகை தீபம் இனிப்புகள்
- அவல் பொரி உருண்டை
- அப்பம் செய்யலாம்.